மாவட்ட செய்திகள்

டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று எனது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
”இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிகு பாப்ரி பள்ளிவாசல் 1992 டிசம்பர் 6 அன்று மதவெறி கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாப்ரி பள்ளிவாசல் நிலம் தொடர்பாக சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயவான்களால் விமர்சிக்கப்பட்டு தற்போது அது உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறது.

அதேநேரம் பாப்ரி பள்ளிவாசலை இடித்தது தொடர்பான வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து அமைக்கப்பட்ட -பர்ஹான் ஆணையம், அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.

இந்நிலையில் 1995 முதல் கடந்த 16 ஆண்டுகளாக தமுமுக தமிழகத்தில் ஜனநாயக வழியில் ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

அதேபோல் இவ்வருடம் உச்சநீதிமன்றம், 1) பாப்ரி பள்ளிவாசலை இடித்த லிபர்ஹான் ஆணையம் சுட்டிக்காட்டிய குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2) அத்வானி உள்ளிட்ட பாப்ரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், 3) பாப்ரி பள்ளிவாசல் இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வ-யுறுத்தி மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் (தர்ணா) நடைபெறவிருக்கிறது.

இந்த தர்ணா போராட்டத்தில் முஸலிம்கள் மட்டுமின்றி, மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் பங்குகொண்டு கண்டன உரைகள் வழங்குவார்கள்.
 

புனித ஹஜ் செல்லும் பயணிகளுக்கு சொட்டு மருந்து தடுப்பூசி

கடந்த 28 ம தேதி அன்று தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டத்தில் புனித ஹஜ் செல்லும்    பயணிகளுக்கு  திருவாரூர் மருத்துவ கல்லூரி  மருத்துவ மனையில் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினரால் சொட்டு மருந்து தடுப்பூசி போடப்பட்டது .சுமார் நானூறு நபர்கள் கலந்து கொண்டனர் .பயனாளிகள் அனைவருக்கும் தமுமுக தொண்டர் அணியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அனைவருக்கும் டீ பிஸ்கட் வழங்கப்பட்டது வந்த அனைவரும் தமுமுகவின் சேவையை வெகுவாகபாராட்டினர்

தமுமுகவிற்கு சான்றிதழும் விருதும்



கடந்த அக்டோபர் தேசிய தன்னார்வ ரத்த தான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரமாற்று குழுமம் மற்றும் தமிழ் நாடு மாநில ஐட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய ரத்த தான விழா அக்டோபர் 2 அன்று தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ல் நடை பெற்றது .அதில் அதிக முறை ரத்த தனம் செய்த  தொண்டு நிறுவனங்களுக்கு  பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது .அதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிக முறை ரத்த தானம் செய்ததற்காக திருவாரூர் மாவட்ட தமுமுகவிற்குதிருவாரூர் நகரம் கொடிக்கால் பாளையம்  கிளைக்கும் விருதுகள் வழங்க பட்டது

பொதக்குடியில் மாநில தலைவர் உரை

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி இஸ்லாமிய நூலகத்தில் கடந்த 7. ம் தேதி அன்று மாநில தலைவர் பேரா. டாக்டர் . எம் எச் ஜவாஹிருல்லாஹ் இரவு தொழுகைக்கு பிறகு பைத்துல் மால் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள் . இதில் பேரா . ஹாஜா கனி ,  நாச்சிகுளம் தாஜுதீன் , நூருதீன் மமக மாவட்ட செயலாளர்  முஜிபுர் ரஹ்மான் , குத்துபுதீன் உட்பட சுமார் 300   நபர்கள் கலந்து கொண்டனர் .