மாவட்ட செய்திகள்

திருவிடசெரியில் சமூகவிரோதி கும்பலின் வெறி செயல்

திருவாரூர் மாவட்டம் திருவிடசெரியில் ஜமாஅத் தலைவர் முஹம்மத் இஸ்மாயில் மற்றும் ஹஜ் முகமது ஆகியோர் சில சமூக விரோதி கும்பலால் கடத்தப்பட்டு இறந்த செய்தியை அறிந்து மாநில தலைவர் பேரா . டாக்டர் . எம் எச் ஜவாஹிருல்லாஹ் ,மாநில செயலாளர் பேரா . ஹாஜா கனி , மாவட்ட தலைவர் நாச்சிகுளம் தாஜுதீன் மமக மாவட் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் , முன்னால் மாவட்ட தலைவர் நூருதீன் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் இருவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். பிறகு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு பிறகு பள்ளிவாசலில் ஜமாஅத் துணை தலைவர் அஹ்மத் திருவிடசேரி பஞ்சாயத்து தலைவர் குதுபுதீன் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் நடந்த சம்பவத்தை தலைவரிடம் விளக்கி கூறினர் . பிறகு குண்டு அடிபட்ட மாற்று மத சகோதர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர்

Comments (0)

Post a Comment